திருப்பூர்:திருப்பூரில், பல்வேறு திருட்டில் ஈடுபட்ட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் அருகில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல், டூவீலரில் சென்ற, மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.அதில், காங்கயம், ராக்கியாபாளையத்தை சேர்ந்த நெளபல், 20, சதாம் உசேன், 20 மற்றும் ஜீவானந்தம், 20 என்பதும், மூன்று பேரும் ஓட்டி வந்தது திருட்டு டூவீலர் என்பதும் தெரிந்தது. 29ம் தேதி பாளையக்காட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்த அருண்ராஜ், 22 என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் பறிப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ராயபுரம் பகுதியில் துாங்கி கொண்டிருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது.மூன்று பேரையும் வடக்கு போலீசார் கைது செய்து, டூவீலர், இரண்டு கத்தி மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE