வால்பாறை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, சிறுகுன்றா ரேஷன் கடையில், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய 'கிட்' வினியோகம் செய்யப்பட்டது.வால்பாறை நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாககடந்த செப்., மாதம், ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 'கிட்' வழங்கும் பணி துவங்கியது.ஆனால், வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் சிந்தாமணி ரேஷன் கடைக்கு, மாத்திரை 'கிட்' வழங்கி இரண்டு மாதங்களாகியும், மக்களுக்கு வினியோகிக்கப்படாமல் இருந்தது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதனையடுத்து, அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்காமல் அலட்சியமாக இருந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு,வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி தொலைபேசியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.இதனையடுத்து, சிறுகுன்றா எஸ்டேட் மக்களுக்கு, நேற்று காலை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மருந்து அடங்கிய 'கிட்' ரேஷன் கடை பணியாளர்களால் வினியோகம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE