கள்ளிக்குடி: கள்ளிக்குடியில் இருந்து காரியாபட்டி செல்லும் ரோட்டில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க அண்டர்பாஸ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாலம் வழியாக குராயூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர்.சில நாட்களாக பெய்த மழையால் அண்டர் பாஸ் பாலத்தில் 2 அடிக்கு நீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக நீர் தேங்காமல் இருக்க மாற்று வழிகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE