உடுமலை:உடுமலை நாட்டுக்கோழி சந்தைக்கு, கட்டுச்சேவல் மற்றும் கோழிகள் வரத்து அதிகரித்தது; கூடுதல் விலைக்கு ஏலம் போனது.உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம்தோறும் திங்கட்கிழமை, காலை, 6:30 முதல், 9:30 வரை, ஆடு, கோழி சந்தை நடக்கிறது.சந்தை கூடும் நாட்களில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, ஆடு, கோழிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த, 8 மாதமாக கால்நடைச்சந்தை கூடாத நிலையில், தற்போது மீண்டும் கூடி வருகிறது.பருவ மழை அதிகரிப்பு, விழா காலங்கள் மற்றும் இறைச்சி விலை அதிகரிப்பு காரணமாக, உடுமலை சந்தைக்கு நாட்டு கோழி வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு, கட்டுச்சேவல் வரத்தும், விற்பனையும் களைகட்டியது. நேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் விற்பனைக்கு வந்தன. நாட்டுக்கோழிகள், 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஏலம்போனது; பல ரகமான நாட்டுச்சேவல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. சேவல்களின் ரகம், தரத்திற்கு ஏற்ப, 1,500 ரூபாய் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE