அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், அரசு அனுமதியில்லாமல் தண்ணீர் டேங்குடன் வாகனங்களை இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.அன்னுார் வட்டார தண்ணீர் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அளித்த புகார் மனு:அன்னுார் வட்டாரத்தில், அரசின் உரிய அனுமதி பெறாமலும், பதிவு சான்று இல்லாமலும், வேன், டிராக்டர் மற்றும் தண்ணீர் டிராக்டர்களை, மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்குகின்றனர். அன்னுார் மற்றும் கரியாம்பாளையத்தில், 20 டிராக்டர்களை, அரசு அனுமதி பெறாமல் தண்ணீர் டேங்க் வாடகைக்கு இயக்குகின்றனர். அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள், அன்னுார் வட்டாரத்தில் ஆய்வு செய்து, விதிமீறி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE