மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கணக் கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, 6,954 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் என கணக்கிட்டுள்ளனர். தற்போது பட்டியலில் உள்ளவர்களில், அரசு வேலைக்கு சென்றவர்களின் பெயர்கள் நீக்கவும், வாரிசுதாரர்கள் பெயர் பதிவு செய்தல், ஆதார் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை பதிவு செய்யும் பணிகள், நகரில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் நடந்து வருகின்றன. இப்பணிகளில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE