கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால், தாவரங்கள் புற்கள் கருகி, வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, முதுமலை உள்வட்டம் பகுதியில், வனத்துறை சார்பில், 200 கி.மீ., துாரத்துக்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை துவக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, தொரப்பள்ளி முதல் கக்கனல்லா இடையே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணியில் பழங்குடி மக்கள் ஈடுபட்டுள்ளனர், வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையில், 28 லட்சம் ரூபாய் செலவில், 200 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால், பழங்குடிகளுக்கு பயன் ஏற்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE