சிதம்பரம்; பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' துவக்க விழா குமராட்சி ஊராட்சியில் நேற்று நடந்தது.குமராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், ஜெயக்குமார் ஜான்சன் தலைமை தாங்கினர். குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலமுருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஊராட்சித் தலைவர் தமிழ்வாணன் பங்கேற்று கூட்டத்தை துவக்கி வைத்து நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி பேசினார்.ஆசிரியர் பயிற்றுனர் மல்லிகா, தலைமை ஆசிரியர் சுகுணா, பயிற்சி தன்னார்வலர் நேதாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE