ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலையின் இருபுறமும் இடையூறாக இருந்த முட்செடிகள் ஆக்கிரமிப்பை தன்னார்வலர்கள் அகற்றினர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ புதுக்குப்பம் செல்லும் சாலையில் இருபுறமும் முட்செடிகள், வளர்ந்து சாலையை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதித்தனர். பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் பலனில்லை. இதனால் ஸ்ரீ புதுக்குப்பத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 15 பேர், பங்குத்தந்தைகள் திவ்யநாதன், போஸ்கோ, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சின்னப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிலவேந்திரன், போஸ்கோ தலைமையில் சாலையின் இருபுறமும் இடையூறாக இருந்த முட்செடிகள், மரக்கிளைகளை அகற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE