புதுச்சத்திரம்; பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழமுத்து மகன் ஆனந்தராஜ், 37; கூலித்தொழிலாளி. இவர், மனைவி இந்துமதி, மகன்கள் அமுதவன், பிரபஞ்சன் நால்வரும் நேற்று முன் தினம் பைக்கில் ஆலப்பாக்கம் ரயில்வேகேட் அருகே வரும் போது, எதிரில் வந்த லாரி மோதியது.பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்துமதி, அமுதவன், பிரபஞ்சன் மூவரும் கடலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE