உளுந்துார்பேட்டை; மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.உளுந்துார்பேட்டை மீனாட்சி தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார் மகன் ஆகாஷ், 20; பிளஸ் 2 முடித்து வீட்டில் உள்ளார். சில ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள அவரது தந்தை கடையில் நகை உருக்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 26ம் தேதி மதியம் முதல் ஆகாைஷ காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.திலீப்குமார் கொடுத்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE