ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் வட்டார மையத்தில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு மற்றும் 'கற்போம்; எழுதுவோம்'இயக்கம் தொடங்குவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, டி.இ.ஓ., க்கள் கென்னடி, அண்ணா துரை தலைமை தாங்கினர்.மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஞானவேல், சிவகுமார், வண்ணதமிழன், அயோத்தி, கோவிந்தராஜலு, முரளி, ராதா ஆகியோர் ஆசிரியர் பயிற்றுநராக இருந்தனர்.பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுத்தல், 'கற்போம்; எழுதுவோம்' திட்டத்தைத் தொடங்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE