காரைக்கால்; காரைக்கால் நேருமார்க்கெட் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரைக்கால் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னொச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 20பேர் கொண்ட குழுவினர் புயல் பணிகள் மேற்கொண்டனர்.பின்னர் கொரோனா நோய் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக நேற்று நேரு மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் பெரியார் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை ஆய்வாளர்கள் மோகனரங்கம், யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE