விழுப்புரம்; விழுப்புரம் நகரில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் கிழக்குப் பாண்டிரோடு பவர் ஹவுஸ் ரோடு அருகில், நகராட்சி குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.இங்கிருந்து, நகரின் பிரதான பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டிக்கு, கிழக்கு பாண்டி ரோட்டில் இருந்து செல்லும் பாதையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தது.இதையடுத்து சேதமடைந்த பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மீண்டும் உடைந்துள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கிழக்கு சண்முகபுரம் காலனி டி.எஸ்.பத்தர் தெருவில் இருந்து மணிமுத்தாறு வீதி செல்லும் சந்திப்பில், கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. இப்பிரச்னை குறித்து, நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், சாலையின் நடுவில், பல மாதங்களாக மரக்கிளையை நட்டு வைத்துள்ளனர்.இரு இடங்களிலும் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE