அவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே சேதமான மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி புதிதாக அமைத்திட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனுார் வட்டம் கோவில்புரையூர் கிராமத்தில் வாணியர் தெருவில் மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி கடந்த ஆறு மாதங்களாக சேதமடைந்த நிலையில், இப்பகுதி மக்கள் சிரமத்துடன் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.கிராம மக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE