விழுப்புரம்; வயிற்று வலியால் அவதியடைந்த லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.வானுார் காலனியை சேர்ந்தவர் நீலகண்டன், 40; லாரி டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வலி அதிகமானதால், மனமுடைந்த நீலகண்டன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம்இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE