விழுப்புரம்; விழுப்புரம் பகுதிகளில் வேளாண் துறை மூலம் நிவர் புயலால் சேதமடைந்த பயிர் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர், களிஞ்சிகுப்பம் ஆகிய பகுதிகளில் நிவர் புயலால் நெல், வாழை மற்றும் பப்பாளி ஆகிய பயிர்கள் சேதமடைந்தது. இந்த பயிர் சேதம் கணக்கெடுக்கும் பணிகள் வேளாண் துறை சார்பில் நடக்கிறது. இப்பணியை, கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, வீடுர் கிராமத்தில் புயலால் சேதமடைந்து நீரில் மூழ்கிய நெற் பயிர்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.அப்போது, வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, தாசில்தார்கள் வெங்கடசுப்பிரமணி, செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE