உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கூலித் தொழிலாளியைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சிறுபுலியூர் காலனியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 59; கூலித்தொழிலாளி. இவர், அதே ஊரில் உள்ள கண்ணன் என்பவரின் நிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.கடந்த 25ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த தெய்வநாயகம் மகன் மணிகண்டன், 30; கண்ணன் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அதனைக் கேட்ட ஏழுமலையை, மணிகண்டண், பூவரசன், யுவராஜ், ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின்பேரில் திருநாவலுார் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து தெய்வநாயகம் மணிகண்டனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE