பீர்க்கன்காரணை; விமானப்படை தள பயிற்சி மையத்தினுள் அத்து மீறி நுழைந்த, வடமாநில வாலிபரை கைது செய்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில், இந்திய விமானப்படை தள, பயிற்சி மையம் இயங்கி வருகிறது.பீர்க்கன்காரணை, சதானந்தபுரத்தில் உள்ள இந்த மையத்தின், 8 மற்றும் 9ம் எண், நுழைவாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், வட மாநில வாலிபர் ஒருவர், அத்துமீறி நுழைந்தார்.அவரை பிடித்த, விமானப்படை தள அதிகாரிகள், பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், விமானப்படை தள பயிற்சி மைய, விங் கமாண்டர் ஆனந்த குமார், புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்த போலீசார், பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தனர்.இதில், அவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, முனீர் சேக், 29, என்பதும், கிழக்கு தாம்பரம், யமுனா தெருவில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தவர், குடிபோதையில் விமானப் படை தள பயிற்சி மையத்தினுள் நுழைந்ததாகவும் தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE