புதுடில்லி : டில்லியில், கொரோனா தொடர்பான பரிசோதனை கட்டணம், 2,400 ரூபாயில் இருந்து, 800 ஆக, நேற்று முதல் குறைக்கப்பட்டு உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில், கொரோனா பாதிப்பை கண்டறியும் பி.சி.ஆர்., பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கான கட்டணமாக, 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டணத்தை, 800 ரூபாயாக குறைத்து, மாநில அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத் துறை பிறப்பித்த உத்தரவு: தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு வருவோரிடம், பரிசோதனை கட்டணமாக, 800 ரூபாய் மட்டுமே பெற வேண்டும்.

பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மாதிரிகள் சேகரித்தால், 1,200 ரூபாய் கட்டணம் பெறலாம். திருத்தப்பட்ட கட்டண விபரங்களை, பொதுமக்கள் அறியும் வகையில் ஆய்வகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். மாதிரிகள் சேகரித்த தகவல், பரிசோதனை முடிவுகள் குறித்து, 24 மணி நேரத்திற்குள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE