கம்பம் : கம்பத்தில் நவ. 11 ல் மோப்ப நாய் கண்டுபிடித்த கஞ்சா தோட்டம் யாருடையது என்பதை கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்.
கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நகருக்கு மிக அருகில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்ததை நவ. 11 ல் மோப்பநாய் வெற்றி கண்டுபிடித்தது. அறுவடைக்கு தயாராக இருந்த 150 செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனால்சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர் யார், அதனை சாகுபடி செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதில் 20 நாட்களை கடந்தும் போலீசார் மவுனம் காத்து வருகின்றனர்.
நிலம் யாருடையது என்பதை வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்த்தால் தெரிந்துவிடும். இதனிடையே அதே இடத்தில் இதற்கு முன்பும் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே போலீசார் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE