மதுரை : வேளாண் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் மூலம் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, செயல்விளக்கம் அளிக்கப்படும். வட்டார அளவில் வேளாண் விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் துணை வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சியில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் விவசாயிகள் வேளாண் அலுவலர்களை இணைக்கும் தொழில்நுட்ப பாலமாக அமையும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE