ஈரோடு: தி.மு.க., மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி, ஈரோடு தெற்கு மாவட்டத்தில், இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்தை, இன்று துவக்குகிறார். ஈரோடு, வில்லரசம்பட்டியில், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கிறார். பின், ஈரோடு, முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலைக்கு, மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் பவானி தொகுதி பகுதிகளில், பல்வேறு தரப்பினரை சந்தித்து பிரசாரம் செய்கிறார். வில்லரசம்பட்டியில் நாளை காலை, வல்வில் ஓரி நினைவிடம் சம்பந்தமான அமைப்புகளை சந்தித்து பேசுகிறார். பின் மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதி பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE