கெங்கவல்லி: சுவேத நதியில், மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். கெங்கவல்லி வழியாக செல்லும், சுவேத நதியில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக, சேலம் மாவட்ட எஸ்.பி., தீபாகானிகேருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி நேற்று, கெங்கவல்லி போலீசார், 74.கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட மினி சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். அதே ஊரை சேர்ந்த கரிகாலன், 23, செல்வம், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான உதயசந்திரன், 24, என்பவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE