அரூர்: அரூர் சப்- டிவிஷனில், கடந்த, மூன்று நாட்களில், டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்த, 11 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், மந்திகுளாம்பட்டியில், நேற்று காலை, 9:00 மணிக்கு, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ராஜிவ்காந்தி, 40, என்பவரை கைது செய்தனர். இதே போல், பெத்தூரில் மது விற்ற மணிவேல், 36, வேணுகிருஷ்ணன், 67, குருபரஹள்ளி ராஜசேகர், 32, வேப்பநத்தம் மாது, 49, பறையப்பட்டி சரவணன், 36, மாட்லாம்பட்டி கோவிந்தன், 55, பிரதாப், 32, சோரியம்பட்டி ஹரிராஜ், 24, பெரியசாமி, 32, பூதநத்தம் ராமச்சந்திரன், 65, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 298 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE