கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, கனிம வளத்துறையினர், குருபரப்பள்ளி - தீர்த்தம் சாலையில், வாகன தணிக்கை நடத்தினர். அந்த வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளின் டிரைவர்கள், லாரியை நிறுத்திவிட்டு தப்பினர். சோதனையில், தீர்த்தம் ஆற்றிலிருந்து தலா, 3 யூனிட் மணல் கடத்தியது தெரிந்தது. டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் புகாரின்படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், பர்கூர் - பசவண்ணகோவில் சாலை கொட்டிலேட்டியில் வாகன தணிக்கையில், அந்த வழியாக வந்த, இரு லாரிகளின் டிரைவர்கள், லாரியை நிறுத்தி விட்டு தப்பினர். சோதனையில் அனுமதியின்றி கிரானைட் கல் எடுத்து சென்றது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பர்கூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE