புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் உட்பட மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போட வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் :
தமிழக சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஓட்டளிக்க வைக்க ஏற்பாடுகள் தயார். உரிய சட்ட விதிமுறைகளை கொண்டு வந்தால், அவர்களை ஓட்டளிக்க வைப்பது சாத்தியம்தான். மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE