கரூர்: கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, மா.கம்யூ., கட்சியினர், 29 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, ஆதரவாக தமிழகம் முழுவதும் நேற்று, மா.கம்யூ., கட்சி சார்பில், போராட்டங்கள் நடந்தன. கரூர் தபால்-தந்தி அலுவலகம் முன், நகர செயலாளர் ஜோதி பாசு தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதில் ஈடுபட்ட, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள், நான்கு பெண்கள் உள்பட, 29 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE