கரூர்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், மாநில செயற்குழு கூட்டம், தலைவர் செல்லையா தலைமையில் கரூரில் நடந்தது. அதில், மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும், இடஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை, வரும் டிச., இறுதிக்குள் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் டேரிக் ரெய்மாண்ட், துணை பொதுச்செயலாளர் ஜான் கென்னடி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE