குளித்தலை: தரகம்பட்டியில், மனைவி, மகன், மருமகளை அரிவாளால் வெட்டிய கணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தரகம்பட்டி செல்வம் நகரை சேர்ந்தவர் சக்திவேல், 57; பிட்டர். மனைவி மீனாட்சி, 50. மனையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியிடம் அடிக்கடி சக்திவேல் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியை அரிவாளால் கழுத்திலும், இடது உள்ளங்கையிலும், சக்திவேல் வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு மகன் சுரேஷ், 28, மருமகள் கிருத்திகா, 24, வந்து தடுத்தபோது, அவர்களையும் சக்திவேல் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த மீனாட்சி, கரூர் அரசு மருத்துவமனையிலும், சுரேஷ், கிருத்திகா ஆகியோர், கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சக்திவேல் காட்டுவாரி அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE