கரூர்: தொழிற்பேட்டை அருகே, வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர் அருகே, தொழிற்பேட்டை பாரதியார் நகரில், சாக்கடை கால்வாயில், குப்பை, கழிவு தேங்கியுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி ஏற்பட்டுள்ளதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதனால், சாக்கடை வடிகாலில் உள்ள கழிவுகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE