கிருஷ்ணராயபுரம்: கொமட்டேரி கிராமத்தில் விவசாய களம் மோசமான நிலையில் இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கொமட்டேரி கிராமத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு விவசாய களம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த களத்தை சுற்றிலும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. தடுப்புகள் சிதலமடைந்துள்ளன. இதனால் விவசாய விளைபொருட்கள் எடுத்து வந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சாலையில் வைத்து எள் உதிர்க்கும் பணி நடக்கிறது. ஆகையால் இந்த களத்தை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE