கிருஷ்ணராயபுரம்: மாயனூர் கதவணை பாலம் சாலையில், மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூரில் இருவழி சாலையுடன் கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மாயனூர் முதல், சீலை பிள்ளைபுதூர் வரை மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். மேலும் இந்த கதவணை சாலை இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதால் அவதிப்படுகின்றனர். ஆகையால் கதவணை சாலையில் மின் விளக்குகளை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE