கரூர்: மகாதானபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் தவித்து வருகின்றனர். திருச்சி -கரூர் சாலையில் உள்ளது மகாதானபுரம். இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி ரயில்வே ஸ்டேஷன், பல்வேறு கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் விவசாய பகுதிகள் என்பதால் ஏராளமான விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் மகாதானபுரத்தில் இருந்து கரூருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பணிக்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நலன் கருதி கரூர் மார்க்கத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதே போல் மகாதான புரத்தில் இருந்து திருச்சி செல்லும் மார்க்கத்தில் நிழற்கூடம் இல்லை. திருச்சி செல்லும் மார்க்கமாக தினந்தோறும் பள்ளி, கல்லூரி, அலுவல் வேலையாக, லாலாபேட்டை குளித்தலை, திருச்சி போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். நிழற்கூடம் இல்லாமல் சேதமடைந்த கொட்டகையில், வெயிலில் நின்று செல்லும் அவலம் பயணிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் நிற்கக் கூட முடியாத நிலை இருந்து வருகிறது. அதனால், பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE