கரூர்: வெள்ளியணை அருகே மழை வந்தால், ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர்-திண்டுக்கல் ரயில்வே இருப்பு பாதையின் கீழ், வெள்ளியணை அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்தாளப்பட்டி புதூர் சாலையில், குகை வழிப்பாதை உள்ளது. அதன் வழியாக, 25க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர். அந்த பகுதியில், மழை பெய்யும் போதெல்லாம், குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், புகார் தெரிவித்தும் பயன் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது, ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், செல்லிபாளையம், கத்தாளப்பட்டி, கொங்குநகர், புதூர், சின்னதம்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில், தண்ணீர் தேங்காத வகையில், அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE