பீஜிங்:எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், பல விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதை வரவேற்பதாக, சீனா கூறியுள்ளது.
சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் அடங்கிய, எஸ்.சி.ஓ., அமைப்பின் மாநாடு, நேற்று முன்தினம் நடந்தது. தற்போது இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இந்தியா உள்ளது. இந்த மாநாட்டில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.சீனா தரப்பில், பிரதமர் லீ கேகியாங்க் பங்கேற்றார்.
இந்த மாநாடு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில், பல விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது; இது வரவேற்கக் கூடிய மாற்றம். இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE