போபால்:மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மாவட்ட மருத்துவமனையில், மூன்று நாட்களில், எட்டு பச்சிளம் குழந்தைகள் பலியானது குறித்து விசாரணை நடத்த, முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் ஷாடோல் மாவட்ட மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் தீர்க்கும் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்பாட்டில் உள்ளன.
கடந்த மாதம், 27 முதல், 30ம் தேதிக்குள், இப்பிரிவுகளில் சிகிச்சை பெற்ற எட்டு குழந்தைகள் உயிரிழந்தனர். 'இந்த மரணத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என, சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலருக்கு, முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டு உள்ளார் 'இந்த பிரிவுகளில் தற்போது இருக்கும், 41 குழந்தைகளுக்கு, ஜபல்பூர் அரசு மருத்துவமனை சிறப்பு டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்' என, அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE