சென்னை:ரேஷனில், அரிசி பிரிவில் உள்ள, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரருக்கு, இன்று முதல், தலா, 5 கிலோ கறுப்பு கொண்டை கடலையும்; முன்னுரிமையற்ற கார்டுதாரருக்கு, தலா, 1 கிலோ துவரம் பருப்பும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
ஊரடங்கால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டதால், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரருக்கு, ஜூலை முதல் நவ., வரை, தலா, 1 கிலோ கறுப்பு கொண்டை கடலை வழங்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி கார்டுதாரருக்கு, 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் என்ற, குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. தமிழக ரேஷன் கடைகளில், இன்று முதல், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரருக்கு, ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து, தலா, 5 கிலோ கறுப்பு கடலை வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு, துவரம் பருப்பு வழங்கப்படாது.
அதேசமயம், முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரருக்கு, துவரம் பருப்பு இலவசமாக வழங்கப் படும். மேலும், ரேஷன் கடைகளில், கார்டுதாரரின் கைரேகை பதிவிற்கு பதில், இம்மாதமும் ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்து, பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE