சென்னை:'கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டிச., 17ல் பஸ் ஸ்டிரைக் நடத்தப்படும்' என, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை, பல்லவன் இல்லத்தில், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின், தொழிற்சங்க தலைவர்கள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். பல்வேறு திட்டங்களுக்காக, ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட, 7,000 கோடி ரூபாயை உடனே திரும்ப செலுத்த வேண்டும்.
மேலும், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, 16ம் தேதிக்குள் நிறைவேற்றித்தர வேண்டும். இல்லாவிட்டால், வரும், 17ம் தேதி அல்லது ஆறு வாரங்களுக்குள் பஸ் ஸ்டிரைக் நடத்தப்படும்.இதுகுறித்து, போக்குவரத்து கழகங்களுக்கு, நாளை அறிவிப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE