சென்னை:தொழில் பூங்காக்கள் அமைக்க, 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு, 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை வழங்க, கூடுதலாக ஆறு தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை, சிப்காட் மேற்கொண்டு வருகிறது.இந்த பணிகளில், 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பங்கேற்க, தமிழக அரசின், 'சிப்காட்' எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது:தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து, தொழில் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்கள், விருப்பத்தின்படி நிலம் வழங்க அழைப்பு விடுக்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், வரும், 5ம் தேதிக்குள், விண்ணப்பங்களை, நேரிலோ, தபால் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.மேலும் விபரங்களை, www.sipcot.tn.gov.in, www.tenders.tn.gov.in என்ற இணைய பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE