தமிழகத்தில், பதிவுத்துறை சார் - பதிவாளர்களுக்கு, இந்த ஆண்டு பொது மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், சொந்த காரணங்களுக்காக இடமாறுதல் கோரி, பலரும் விண்ணப்பித்து இருந்தனர்.ஊரடங்கால், இது தொடர்பான பணிகள் முடங்கியிருந்த நிலையில், தகுதி உடையோருக்கு இடமாறுதல் வழங்கும் பணிகள் துவங்கிஉள்ளது.இதன்படி, திருப்பூர், தென்காசி, கிருஷ்ணகிரி, வேலுார், மதுரை மாவட்டங்களை சேர்ந்த, 11 சார் - பதிவாளர்களுக்கு இடமாறுதல் வழங்கி, பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE