மதுரை:பொதிகை உட்பட துார்தர்ஷன் கட்டுப்பாட்டில் உள்ள மாநில மொழி சேனல்களில், சமஸ்கிருத செய்தி ஒளிபரப்ப தடை விதிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், நேற்று வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி முறையிட்டதாவது:மத்திய அரசின் துார்தர்ஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மொழி, 'டிவி' சேனல்களில் சமஸ்கிருதத்தில், 15 நிமிடம் செய்தி ஒளிபரப்பு செய்ய, பிரசார் பாரதி உத்தரவிட்டு உள்ளது.
தமிழ் பொதிகை, 'டிவி' சேனலிலும் ஒளிபரப்ப உள்ளனர். மறைமுகமாக சமஸ்கிருதத்தை புகுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்ப தடை விதிக்கும் வகையில், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, அவசர பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, முறையிட்டார். நீதிபதிகள், 'நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க வாய்ப்பில்லை. 'விருப்பமில்லை எனில், சமஸ்கிருத செய்தி பார்ப்பதை தவிர்க்கலாமே. மனு செய்யும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE