புதுச்சேரி : நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, கல் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை விஜயவேணி எம்.எல்.ஏ., வழங்கினார்.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தவணை தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், விஜயவேணி எம்.எல்.ஏ., தொகுதியைச் சேர்ந்த 87 பயனாளிகளுக்கு ரூ. 54 லட்சம் ரூபாயிற்கான ஆணையினை வழங்கினார்.நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்துறை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE