புதுடில்லி: கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
ரஷ்யாவுடன் இணைந்து நிலம், விமானம், கப்பல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றில் இருந்து ஏவக்கூடிய, 'பிரமோஸ்' ஏவுகணைகளை, நாம் உருவாக்கி வருகிறோம். ஒலியை விட மூன்று மடங்கு அதிக வேகம் மற்றும் செயல்திறன் உடைய இந்த ஏவுகணைகளின் சோதனைகள், தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில், நம் கடற்படையினர் பிரமோஸ் ஏவுகணை சோதனையை, நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை, ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE