புதுடில்லி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார்.
![]()
|
வங்க கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புயல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் பழனிசாமி , கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் தொலை பேசி மூலம் கேட்டறிந்தார்.
![]()
|
தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தெரிவித்தார்.
முதல்வருக்கு மோடி பாராட்டு
மேலும் நிவர் புயலின் போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் இயல்பு நிலையை கொண்டு வந்த முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டும் தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement