'வரும்... ஆனா வராது!'
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம், சமீபத்தில் நடந்தது.அதன் பின், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், நிருபர்களிடம் பேசுகையில், 'ரஜினி, தன் அரசியல் நிலைப்பாட்டை விரைவில் சொல்வதாக அறிவித்திருக்கிறார். அதற்காக, ஹிந்து மக்கள் கட்சி காத்திருக்கிறது. தமிழகத்தில், ஆன்மிக அரசியல் தான் வரப் போகிறது' என்றார்.இதைக் கேட்ட இளம் நிருபர், 'ரஜினி அரசியலுக்கு வருவது, 'வரும்... ஆனா வராது' கதை தான் என, அவரது ரசிகர்களே வெறுப்புல இருக்காங்க... இதுல, இவரு வேற...' என, சலித்துக் கொள்ள, சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE