சென்னை:'நிவர்' கன மழை காரணமாக, நான்கு பேர் இறந்தனர். அவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர், வரவேற்பு பந்தல் கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி இறந்தார். அவர் குடும்பத்துக்கும், 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனுடையோர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் கூறியதாவது: கடந்த, 29 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி, விழாவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது, கண்டனத்திற்குரியது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE