சென்னை:சென்னை, கோவை மாவட்டங்களை தவிர, 35 மாவட்டங்களில், தினமும் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை,100க்கும் கீழ் குறைந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 221 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 68 ஆயிரத்து, 854 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 1,428 பேருக்கு தொற்று உறுதியானது. அதிகபட்சமாக, சென்னையில், 397; கோவையில், 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற, 35 மாவட்டங்களில், தினமும் பதிவாகும் தொற்று எண்ணிக்கை, 100க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதுவரை, 1.21 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஏழு லட்சத்து, 84 ஆயிரத்து, 747 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவர்களில், நேற்று, 1,398 பேர் உட்பட, ஏழு லட்சத்து, 62 ஆயிரத்து, 15 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது சென்னையில், 3,584; கோவையில், 1,001 பேர் என, 10 ஆயிரத்து, 999 பேர், கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று, 11 பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 733 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE