சென்னை:முதல்வரை தொடர்பு கொண்டு, புயல் சூழல் குறித்த விபரங்களை, பிரதமர்நரேந்திர மோடி கேட்டறிந்தார்.இது தொடர்பாக, பிரதமர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது :தமிழக முதல்வர் பழனிசாமி., உடன், தொலைபேசியில் பேசினேன்.
புரெவி புயல் காரணமாக, மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான, அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், மக்கள் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும், பிரதமர் பேசி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE