பெ.நா.பாளையம் : கணுவாயில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், பொள்ளாச்சி கோட்டூர் சக்தி அணி வெற்றி பெற்றது.
கணுவாயில் தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கோவை மேற்கு மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன. கே.சி.கே., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த இப்போட்டியில், 20 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.போட்டிகள் 'லீக்' முறையில் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி கோட்டூர் சக்தி அணி முதலிடம் பெற்றது. முதல் பரிசான ரொக்கம், 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை தி.மு.க., மேற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வழங்கினார்.
இரண்டாம் பரிசு பெற்ற உஜ்ஜையனுார் அணிக்கு, 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மூன்றாம் பரிசு பெற்ற தடாகம் அணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE